வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு


வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 28 Aug 2022 8:04 AM GMT (Updated: 28 Aug 2022 8:42 AM GMT)

வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை

மீஞ்சூர் அடுத்த வல்லூரில் தேசிய அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு 3 யூனிட்டில் தலா 500 வீதம் 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் முதல் யூனிட்டில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று 3-வது யூனிட்டில் ஏற்பட்ட பாதிப்பால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரு யூனிட்டுகளில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story