அரவைக்காக 1,000 டன் நெல்


அரவைக்காக 1,000 டன் நெல்
x

நீடாமங்கலத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு அரவைக்காக 1,000 டன் பொதுரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதைமுன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் தெற்குநத்தம், இடையர்நத்தம், அசேஷம், மூவாநல்லூர், அரவத்தூர், பெருகவாழ்ந்தான் ஆகிய ஊர்களில் உள்ள திறந்த வெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் 78 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதனை நெல்மூட்டைகளுடன் சரக்கு ரெயில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றது.


Next Story