திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில்1,008 சங்காபிஷேகம்


திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில்1,008 சங்காபிஷேகம்
x
தினத்தந்தி 12 Dec 2022 6:45 PM GMT (Updated: 12 Dec 2022 6:46 PM GMT)

கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுவேதாரண்யேஸ்வரர் கோவில்

திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் காசிக்கு இணையான ஆறு கோவில்களில் முதன்மையான கோவிலாக விளங்குகிறது.இந்த கோவிலில் சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோரமூர்த்தி தனி சன்னதியில பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவில் நவக்கிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார தலமாக விளங்குகிறது.

1,008 சங்காபிஷேகம்

பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடைபெறும். அதன்படி கடைசி சோமவாரத்தையொட்டி நேற்று 1,008 சங்காபிஷேகம் நடந்தது.இதனை முன்னிட்டு சன்னதி முன்பு 1,008 சங்குகள் சிவன் வடிவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதில் நறுமணப் பொருட்களைக் கொண்ட புனித நீர் ஊற்றப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சிறப்பு யாகம்

மாலையில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் 1008 சங்குகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் அர்ச்சகர் திருஞானம், மேலாளர் சிவக்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story