108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது


108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது
x

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா அம்மூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து 108 கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை பிரசவ வலி தொடர்பாக போன் வந்தது. உடனடியாக சுமைதாங்கி ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது, இதையடுத்து மருத்துவ உதவியாளர் பி.மாலதி மற்றும் டிரைவர் ராஜீவ்காந்தி ஆகியோர் ஆம்புலன்சில் விரைந்தனர்.

அம்மூரை ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மோகன் (வயது 40) என்பவரின் மனைவி இளவரசி (34) பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

ஆற்காடு தனியார் கல்லூரி அருகே செல்லும்போது பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் பி.மாலதி பிரசவம் பார்த்ததார். அப்போது மாலை 3.45 மணியளவில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும் சேயும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.


Next Story