10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: வேட்டமங்கலம் ராசம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி


10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: வேட்டமங்கலம் ராசம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
x

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வேட்டமங்கலம் ராசம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

கரூர்

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் பி.கே. நகரில் உள்ள ராசம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சி ஆகும். மாணவி வசுதாரணி 500-க்கு 476 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி தர்ஷிகா 469 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், மாணவி நேஹா 465 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பெற்றுள்ளனர்.

450-க்கு மேல் 4 பேரும், 400க்கு மேல் 12 பேரும் எடுத்துள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைவரும், தாளாளருமான வடிவேல், செயலாளர் ஈஸ்வரி வடிவேல், ஆலோசகர் கார்த்திகா குமரேசன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், பிரியங்கா பிரேம்குமார், மெட்ரிக் பள்ளியின் முதல்வர் பார்த்தசாரதி, கல்வியியல் கல்லூரி முதல்வர் சந்திரசேகரன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Next Story