கல்குவாரி குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் சாவு


கல்குவாரி குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் சாவு
x
தினத்தந்தி 1 Jun 2022 7:30 PM GMT (Updated: 1 Jun 2022 7:30 PM GMT)

நண்பர்களுடன் குளிக்க சென்ற இடத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

தர்மபுரி

அருர்:

நண்பர்களுடன் குளிக்க சென்ற இடத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

அரூர் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பள்ளி மாணவன்

தர்மபுரி மாவட்டம் அரூர் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவன். இவருடைய மகன் லோகேஷ் (வயது 15). தற்போது 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார்.

நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் தன்னுடைய நண்பர்களுடன் லோகேஷ் குளிக்க சென்றான். மழை பெய்த காரணத்தினால் குட்டையில் தண்ணீர் அதிகமாக இருந்தது.

தண்ணீரில் மூழ்கி சாவு

நண்பர்களுடன் சென்ற ஆர்வம் மிகுதியால் குட்டையில் இறங்கி ேலாகேஷ் குளிக்க முயன்றான். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் லோகேஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து லோகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story