தமிழ்நாட்டில் 11 பேருக்கு கொரோனா


தமிழ்நாட்டில் 11 பேருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் நேற்று 163 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 163 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சென்னையில் 5 பேருக்கும், கோவை மற்றும் வேலூரில் தலா 2 பேருக்கும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிக்கப்பட்டதில் 6 ஆண்கள், 5 பெண்கள் அடங்குவர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story