வீட்டில் 11¼ பவுன் நகை திருட்டு


வீட்டில் 11¼ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 26 Feb 2023 2:48 PM GMT (Updated: 26 Feb 2023 2:53 PM GMT)
சேலம்

சூரமங்கலம்:-

சேலம் நரசோதிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருணா (வயது 38). இவர் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் சூரமங்கலம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 11¼ பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. அதனை நாங்கள் வசிக்கிற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்கள் திருடி சென்றதாக சந்தேகம் தெரிவித்திருந்தார். அதன்பேரில் சூரமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story