1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ஓடும் ரெயிலில் கடத்தப்பட்ட 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலம் நகரிப்புத்தூர் ரெயில் நிலையத்தில் வேலூர் பறக்கும் படை தனி தாசில்தார் விநாயகமூர்த்தி, நகரிப்புத்தூர் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் பறக்கும் படை குழுவினர், போலீசார் கூட்டாக இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அந்தவழியாக செல்லும் ரெயில்களில் சோதனை செய்ததில் பயணிகளின் இருக்கையின் கீழ் 61 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை திருவலத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





