வாணியம்பாடியில் 112 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


வாணியம்பாடியில் 112 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

வாணியம்பாடியில் 112 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடியில் 112 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாணியம்பாடி மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் வாணியம்பாடி நகரில் உள்ள வணிக வளாகங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 112 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.27,500 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை கடைகளை விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த ஆய்வின் போது வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் துறை அதிகாரி கோபாலகிருஷ்ணன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் உள்பட நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story