மிக்ஜம் புயல் எதிரொலியாக 12 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - ரெயில்வே நிர்வாகம்


மிக்ஜம் புயல் எதிரொலியாக 12 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - ரெயில்வே நிர்வாகம்
x
தினத்தந்தி 3 Dec 2023 7:45 PM GMT (Updated: 3 Dec 2023 7:46 PM GMT)

மிக்ஜம் புயல் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'மிக்ஜம்' புயல் சென்னைக்கு கிழக்கே 190 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. தற்போது 8 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது.

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புயல் காரணமாக 12 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.17235), மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17236), பெங்களூரில் இருந்து காக்கிநாடாவுக்கு 6-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17209), பெங்களூரில் இருந்து கவுகாத்திக்கு 6 மற்றும் 7-ந்தேதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12509) மற்றும் எர்ணாகுளத்தில் இருந்து தாதாநகருக்கு 6-ந்தேதி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (18190) என 12 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story