தமிழ்நாட்டில் 12 பேருக்கு கொரோனா


தமிழ்நாட்டில் 12 பேருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் நேற்று 517 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 517 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், சென்னையில் 8 பேருக்கும், சேலத்தில் 2 பேருக்கும், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என தமிழ்நாட்டில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 29 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 162 ஆக உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story