ேகாவில் விழாவில் 12 பவுன் நகை திருட்டு


ேகாவில் விழாவில் 12 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அருகே ேகாவில் விழாவில் 12 பவுன் நகை திருட்டு போனது.

ராமநாதபுரம்

சத்திரக்குடி,

பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடியில் முனியப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது கும்பாபிஷேக விழாவிற்கு வந்திருந்த முதுகுளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணி (47) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகைகளையும், போகலூரைச் சேர்ந்த பொன்னையா மனைவி பொன்னம்மாள் (70) என்பவர் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் நகைகளையும் மர்ம நபர்கள் கூட்டத்திற்குள் புகுந்து திருடிச் சென்றனர். இது குறித்து அவர்கள் இருவரும் சத்திரக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில் சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story