13 பவுன் நகைகள் திருட்டு


13 பவுன் நகைகள் திருட்டு
x

13 பவுன் நகைகள் திருடப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி அடுத்த பள்ளத்தூர் முத்து வீரப்ப செட்டியார் வீதியை சேர்ந்தவர் மகாகணேஷ் (வயது 53). இவர் காரைக்குடியில் நகை பட்டறை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது மனைவியும், குடும்பத்தாரும் தஞ்சாவூர் சென்றுவிட்டனர். மகாகணேஷ் வீட்டை பூட்டிவிட்டு நகை பட்டறைக்கு வந்துவிட்டார். மதியம் வீட்டுக்குச் சென்றபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரத்தை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story