சரக்கு ரெயிலில் 1,300 டன் ரேஷன் அரிசி வந்தது


சரக்கு ரெயிலில் 1,300 டன் ரேஷன் அரிசி வந்தது
x
தினத்தந்தி 29 March 2023 6:45 PM GMT (Updated: 29 March 2023 6:45 PM GMT)

திருவாரூரில் இருந்து குமரிக்கு சரக்கு ரெயிலில் 1,300 டன் ரேஷன் அரிசி வந்தது

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

திருவாரூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 1,300 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அரிசி மூடைகள் சரக்கு ரெயில் வேகன்கள் மூலமாக கொண்டு வரப்பட்டன. மொத்தம் 22 வேகன்களில் வந்த அரிசி நேற்று நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அந்த வேகன்களில் இருந்து லாரிகளில் அரிசி மூடைகள் ஏற்றப்பட்டு, உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டன.


Next Story