வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு


வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
x

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர்

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் தலா 3 அலகுகளில் 210 விதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட் 2 அலகுகளில் 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொண்டு வருவதால் முதல் யூனிட்டில் 2-வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2-வது யூனிட் 2 அலகுகளில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி தடைசெய்யப்பட்டுள்ளது. வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 1,410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை சரிசெய்யும் முயற்சியில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story