பாணாவரத்தில் 15 கிலோ குட்கா பறிமுதல்


பாணாவரத்தில் 15 கிலோ குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 2 July 2023 6:12 PM GMT (Updated: 3 July 2023 8:25 AM GMT)

பாணாவரத்தில் 15 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

பாணாவரம்,

பாணாவரம் ரெயில்வே ரோடு பகுதியில் நேற்று பாணாவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

அப்போது அந்த பையில் தடை செய்யப்பட்ட 15 கிலோ குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் பாணாவரம் யாதவர் தெருவை சேர்ந்த தண்டபாணி என்பவரின் மனைவி திலகவதி (வயது 34) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story