தமிழ்நாட்டின் இன்று 16 இடங்களில் சதமடித்த வெயில்


தமிழ்நாட்டின் இன்று 16 இடங்களில் சதமடித்த வெயில்
x

அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி பேரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வரக்கூடிய நிலையில், கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

நேற்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 16 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

குறிப்பாக இரண்டாவது நாளாக இன்று அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் விமான நிலையம் பகுதியில் 105 டிகிரி பேரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் – 105.44, சென்னை மீனம்பாக்கம் – 105.44, கடலூர் – 102.92, ஈரோடு – 103.64, கரூர் பரமத்தி – 104.9, மதுரை நகரம் – 102.2, மதுரை விமான நிலையம் – 103.28, நாகப்பட்டினம் – 100.04, பரங்கிப்பேட்டை – 104.36, நாமக்கல் – 100.4, பாளையங்கோட்டை – 102.02, சேலம் – 102.02, தஞ்சாவூர் – 102.2

திருச்சிராப்பள்ளி – 103.1, திருத்தணி – 105.8, வேலூர் – 108.14 என மொத்தம் தமிழ்நாட்டில் 16 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. புதுச்சேரியில் 102 டிகிரி ஃபேரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

இன்னும் மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story