1,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது


1,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 May 2023 6:45 PM GMT (Updated: 26 May 2023 6:46 PM GMT)

ராமநாதபுரத்தில் 1,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சிநேகப்பிரியா உத்தரவின் பேரில் ராமநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பண்டியன் தலைமையில் குமாரசாமி, முத்துக்கிருஷ்ணன், தெய்வேந்திரன் உள்ளிட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் அருகே மென்னந்தி கிராமப் பகுதியில் அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது அந்த வாகனத்தில் தலா 40 கிலோ எடையுள்ள 40 சாக்கு மூடைகளில் 1600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியை சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ராமநாதபுரம் அருகே உள்ள காரடர்ந்தகுடி பகுதியை சேர்ந்த நாகநாதன் (வயது52) மற்றும் சிவகங்கை மாவட்டம் செங்கந்தி அருகே உள்ள தேவனிப்பட்டி மணி என்பவரின் மகன் டிரைவர் முருகன் (33) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Related Tags :
Next Story