மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது

ஓசூரில் மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்
ஓசூர் சிப்காட் ஈஸ்வரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 44). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து அறிவழகன் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் மோட்டார் சைக்கிளை பேடரப்பள்ளி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த விஜய் (24), பாரதியார் நகர் சரவணன் (23) ஆகியோர் திருடியது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





