தந்தை, மகனை தாக்கிய 2 பேர் கைது


தந்தை, மகனை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 July 2023 12:15 AM IST (Updated: 24 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாலாட்டின்புத்தூர் அருகே தந்தை, மகனை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள கடலையூர் வண்ணார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 59). கூலி தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் மாரிமுத்து (எ) மகேஷ் (32) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கணேசன் மற்றும் அவரது மகன் சுப்புராஜ் (26) ஆகிய இருவரும் அப்பகுதி சாலை வழியாக நடந்து சென்றனர்.

அப்போது அங்கு வந்த மாரிமுத்து மற்றும் அவரது தந்தை பாலமுருகன் (52) ஆகிய இருவரும் அவர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து, அவரது தந்தை பாலமுருகன் ஆகிய இருவரும் சேர்ந்து கம்பால் கணேசன் மற்றும் சுப்புராஜை தாக்கினர். இதில் காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் பேரில் நாலாட்டின்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பாராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாலமுருகன், அவரது மகன் மாரிமுத்து ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தார்.

1 More update

Next Story