வாலிபரை தாக்கிய 2 பேர் கைது


வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
x

வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டை மணிமேகலை தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் (வயது 28). இவரும், நண்பர் மாரி கணேஷ் என்பவரும் நேற்று இரவு அந்த பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக கோழி இறைச்சி கடையை நடத்தி வரும் அரி ராமசுப்பிரமணியன் (26), முருகன் (35), சந்தானம் ஆகியோர் வந்தனர். அப்போது அவர்களுக்கும், ஆவுடையப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரி ராமசுப்பிரமணியன் தரப்பினர் கம்பால் ஆவுடையப்பனை தாக்கினர். இதனை தடுக்க முயன்ற மாரிகணேசையும் தாக்கினர்.

இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரி ராமசுப்பிரமணியன், முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான சந்தானத்தை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story