மெக்கானிக்கிடம் பணம் பறித்த 2 பேர் கைது


மெக்கானிக்கிடம் பணம் பறித்த 2 பேர் கைது
x

மெக்கானிக்கிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்தனர்.

கரூர்

புலியூர் அமராவதி நகரை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 25). மெக்கானிக்கான இவர், நேற்று முன்தினம் அந்தபகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த விஷன் (19), பிரதாப் (19) ஆகியோர் முனிராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.300-ஐ பறித்து சென்றனர்.இதுகுறித்து முனிராஜ் கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிந்து, விஷன், பிரதாப் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story