கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

போளூரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

போளூர்

போளூர் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அல்லி நகர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் போளூர் ஆரியன் தெருவை சேர்ந்த பழனி மகன் தினகரன் என்ற தீனா (வயது 22) காங்கேயனூர் காலனியைச் சேர்ந்த சரவணன் மகன் சத்தியபிரகாஷ் (22) ஆகிய இருவரும் கஞ்சா விற்றது தெரியவந்தது

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய 2 மோட்டார்சைக்கிள்கள், 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story