கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை போலீசார் குளித்தலை-தண்ணீர்பள்ளி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேரை விசாரித்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கஞ்சா வைத்திருந்த குளித்தலை மலையப்பநகர் பகுதியை சேர்ந்த தர்மன் (வயது 22), பெரியபாலம் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





