கஞ்சா விற்ற 2 பேர் கைது

பழனி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழனி தாலுகா போலீசார் நேற்று நெய்க்காரப்பட்டி, கரடிக்கூட்டம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரடிக்கூட்டம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். மேலும் அவர்களை சோதனை செய்தனர். அதில், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த அஜய் (வயது 24), செல்வபாண்டி (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





