மது விற்ற 2 பேர் கைது
நாகர்கோவிலில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது விற்பனை
நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று ஆம்னி பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றதாக வாத்தியார் விளையை சோ்ந்த ஏசுதாஸ் (வயது 77) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல வைத்தியநாதபுரம் வயல்தெருவில் மது விற்றதாக அதேபகுதியை சோ்ந்த ஏசுதாஸ் (69) என்பவரை கோட்டார் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 மது பாட்டில்கள் மற்றும் ரூ.2,300-ம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story