திருட்டு வழக்கில் 2 பேர் கைது

திருட்டு வழக்கில் 2 பேர் கைது
கோவை உக்கடத்தை சேர்ந்தவர் இப்ராகிம் (வயது 30). இவர் வீடு கட்ட தேவையான கட்டிட பொருட்களை வீட்டின் முன்பு போட்டு இருந்தார். அதில் ரூ.3 ஆயிரம் இரும்பு கம்பிகளை 2 வாலிபர்கள் திருடிவிட்டு நைசாக தப்ப முயன்றனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபர்களை பிடித்து உக்கடம் பெரியக்கடைவீதி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ஜி.எம். நகரை சேர்ந்த அபுதாகீர் (21), நவ்சாத் (24) என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





