2 ேபருக்கு அரிவாள் வெட்டு


2 ேபருக்கு அரிவாள் வெட்டு
x

2 ேபருக்கு அரிவாள் வெட்டு

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள அலமேலுபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் சார்லஸ் (வயது36), இருதயசாமி (45). சம்பவத்தன்று அதே தெருவை சேர்ந்த ராஜா (34), நெப்போலியன் (36), சவுரியம்மாள் (51) ஆகிய‌ 3 பேரும் சேர்ந்து முன்விேராதம் காரணமாக சார்லஸ், இருதயசாமி ஆகியோரை திட்டினர். இதில் ஆத்திரமடைந்த ராஜா, நெப்போலியன் ஆகியோர் அரிவாளால் சார்லஸ், இருதயசாமி ஆகியோரை வெட்டினர். இதில் படுகாயமடைந்த 2 பேரும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சார்லஸ் மனைவி சரண்யா (26) திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்ே்பரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ராஜா, நெப்போலியன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story