பாலத்தில் கார் மோதி 2 பேர் காயம்


பாலத்தில் கார் மோதி 2 பேர் காயம்
x

பாலத்தில் கார் மோதி 2 பேர் காயம் அடைந்தனர்.

அரியலூர்

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பூவரசன் (வயது 23). இவர் தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் ஒரு காரில் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். காரை சுப்பிரமணியன் என்பவர் ஓட்டி சென்றார். ஜெயங்கொண்டம் அருகே விருத்தாசலம் செல்லும் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள பாலத்தில் மோதியது. இந்த விபத்தில் பூவரசனின் தாய் கிருஷ்ணவேணி (42), உறவினர் ராஜமாணிக்கம் (27) ஆகியோர் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story