மேலும் 2 பேர் கைது


மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி வாலிபர் கொலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி,

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோதவூர் பகுதியை சேர்ந்தவர் வினித் என்ற அறிவழகன் (வயது 26). காரைக்குடியில் நடந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இவர் ஜாமீனில் வெளிவந்து காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட்டு வந்தார். சம்பவத்தன்று போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வந்தபோது காரில் வந்த 5 பேர் கும்பல் அறிவழகனை கத்திகளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இந்த சம்பவம் குறித்து காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து திருமங்கலம் அருகே உள்ள மயிட்டான்பட்டியை சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர் உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 2 பேர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தனர்.

அறிவழகன் தரப்பினருக்கும், ஆதிநாராயணன் தரப்பினருக்கும் விருதுநகரில் மார்க்கெட் ஏலம் எடுப்பது, உள்ளாட்சி தேர்தல் காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது. அதன் காரணமாக அறிவழகன் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. தற்போது இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு தலை மறைவாய் இருந்த மதுரை ஊமச்சிகுளத்தை சேர்ந்த பழனி குமார் (26), செம்பியேந்தல் பகுதியை சேர்ந்த திலீபன் சாய்(26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

1 More update

Related Tags :
Next Story