எரிசாராயம் பதுக்கிய வழக்கில் மேலும் 2 பேர் கைது


எரிசாராயம் பதுக்கிய வழக்கில் மேலும் 2 பேர் கைது
x

எரிசாராயம் பதுக்கிய வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

எரிசாராயம் பதுக்கிய வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை அருகில் உள்ள களஸ்தாம்பாடி கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் மோகன்தாஸ் (வயது 32). பிரபல சாராய வியாபாரி. இவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் 2 ரகசிய அறையில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 125 கேன்களில் அடங்கிய 4 ஆயிரத்து 375 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து மோகன்தாஸை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தொடர்புடைய திருவண்ணாமலை பூதமங்கலத்தை சேர்ந்த பூ.ஏழுமலை, அ.ஏழுமலை ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பிளாஸ்டிக் கேனில் இருந்த 35 லிட்டர் எரிசாரயம், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.



Next Story