பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

வடமதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடமதுரை அருகே உள்ள புத்தூர் குளத்துக்கரையில், வடமதுரை போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மயானம் அருகே, 2 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதனைக்கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் புத்தூர் பிச்சம்பட்டியை சேர்ந்த ராமையா (வயது 52), சின்னன் (30) என்று தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.200 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





