பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்னிலை சப்- இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் காட்டம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் அருகே நஞ்சை காளிக்குறிச்சியை சேர்ந்த மகேந்திரன் (வயது 37), தொப்பம்பட்டியை சேர்ந்த பூபதி (39) ஆகியோர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.500 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





