லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது


குடியாத்தத்தில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக வந்த தொடர் புகார்களின் பேரில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ரவி மற்றும் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்ததாக நரி முருகப்ப முதலி தெருவை சேர்ந்த விஜய்சங்கர்( வயது 58), பெரியார் நகரை சேர்ந்த சிவராஜ் (48) ஆகிேயாரை கைது செய்தனர்.


Next Story