மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Sep 2023 11:15 PM GMT (Updated: 28 Sep 2023 11:16 PM GMT)

கம்பத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

கம்பம் பாரதியார் நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 41). ஒர்க்ஷாப்பில் கழிவு ஆயில் வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவர் கடந்த 26-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார். பின்னர் காலையில் அவர் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் ராஜாராம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையில் போலீசார் கம்பம் அரசு மருத்துவமனை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கூடலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி (46), ஈஸ்வரன் (26) என்றும், பாரதியார் நகரில் ராஜாராம் என்பவருடைய மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story