பீடி இலை- மண்எண்ணெய் கடத்த முயன்ற 2 பேர் கைது


பீடி இலை- மண்எண்ணெய் கடத்த முயன்ற 2 பேர் கைது
x

பீடி இலை- மண்எண்ணெய் கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

கூடங்குளம்:

நெல்லை மாவட்டம் உவரி கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலைகள், மண்எண்ணெய் ஆகியவை கடத்தப்பட இருப்பதாக கூடங்குளம் கடலோர குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் உவரி கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக பதிவு எண் இல்லாமல் புறப்பட தயாராக இருந்த படகை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அதில் சுமார் 600 லிட்டர் மண்எண்ணெய் மற்றும் பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததும், அதனை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்தப் படகில் புறப்பட தயாராக இருந்த தூத்துக்குடி கடற்கரை சாலை அண்ணா தெருவை சேர்ந்த அந்தோணி ராஜ் மகன் பிரவீன் (வயது 38), இனிகோ நகர் பீச் ரோட்டை சேர்ந்த கிஷோர் (வயது 34) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் மற்றும் மண்எண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுடன் தொடர்புடைய மாடம்பிள்ளை தர்மத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் துளசி மணி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story