ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் சிக்கினர்


ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் சிக்கினர்
x

நெல்லை அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் சிக்கினர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று நெல்லை அருகே உள்ள புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியதாக சிறுக்கன்குறிச்சியை சேர்ந்த கருத்தப்பாண்டி (வயது 23), இசக்கிபாண்டி (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 1280 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story