மோட்டார் சைக்கிள், மொபட் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள், மொபட் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி
x

வேலகவுண்டம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள், மொபட் நேருக்கு நேர் மோதியது. இதில் பேர் பரிதாபமாக இறந்தனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

நேருக்குநேர் மோதல்

பரமத்திவேலூர் தாலுகா, நடத்தை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் ராகுல் (வயது 22). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தொண்டிபட்டிபுதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது தொண்டிபட்டிபுதூரில் இருந்து வேலகவுண்டம்பட்டி நோக்கி எதிரே வந்த தொண்டிபட்டிபுதூரை சேர்ந்த நடராஜ் (60) என்பவரது மொபட்டும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ராகுல் மற்றும் முதியவர் நடராஜ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

2 பேர் பலி

படுகாயம் அடைந்த இருவரையும் அந்த வழியாக வந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story