விஷம் குடித்து பெண் உள்பட 2 பேர் தற்கொலை


விஷம் குடித்து பெண் உள்பட 2 பேர் தற்கொலை
x

வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவத்தில் விஷம் குடித்து பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்:

கண்டாச்சிபுரம் அருகே உள்ள கணக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு(வயது 38). கட்டிட மேஸ்திரி. இவர் மது குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லவில்லை. இதை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த சேட்டு, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தற்கொலை

சின்னசேலம் அடுத்த தகரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி மாதேஸ்வரி(வயது 42). சம்பவத்தன்று இவர் விஷம் குடித்தார். வயிறு வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாதேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story