மோட்டார்சைக்கிள்கள் மோதலில் வேளாண்மை அலுவலர் உள்பட 2 பேர் பலி


மோட்டார்சைக்கிள்கள் மோதலில் வேளாண்மை அலுவலர் உள்பட 2 பேர் பலி
x

தண்டராம்பட்டு அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வேளாண் அதிகாரி உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வேளாண் அதிகாரி உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

வேளாண்மை அலுவலர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா நீப்பத்துறை கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 52). இவர் தண்டராம்பட்டிலுள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விதை சான்று உதவி அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர் அலுவலக பணி நிமித்தமாக திருவண்ணாமலையில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு செல்வதற்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது தானிப்பாடி சந்தை மேடு பகுதியை சேர்ந்த சக்திவேல் (27) என்ற வாலிபர் திருவண்ணாமலையிலிருந்து தானிப்பாடி நோக்கி எதிரில் வந்து கொண்டிருந்தார். செட்டிப்பட்டு என்ற இடத்தில் இருவரது மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

வழக்கு

தகவல் அறிந்த தண்டராம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story