மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது
களியக்காவிளை:
களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் தலைமையிலான போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது படந்தாலுமூடு பகுதியில் வீட்டில் மது விற்ற சுகுமாரன் (வயது 72) என்பவரை கைது செய்து அவரது வீட்டில் இருந்த 45 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதுபோல் குழித்துறை பறம்புவிளையில் மதுவிற்ற ரெகுவரன் (72) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





