மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2023 6:45 PM GMT (Updated: 26 April 2023 6:45 PM GMT)

திருவேங்கடம் பகுதியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

திருவேங்கடம்:

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஆவுடையார்புரம் மற்றும் சங்கரன்கோவில் சாலையில் அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பதாக திருவேங்கடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைலிங்கம் தலைமையில் போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்பொழுது ஆவுடையார்புரம் பகுதியில் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் 14 மது பாட்டில்கள் இருந்தது. அவர் திருவேங்கடத்தை சேர்ந்த அய்யனார் (வயது 45) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் சங்கரன்கோயில் சாலையில் ரோந்து சென்றபோது அங்கு ஒரு கடைப்பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த உமையத்தலைவன்பட்டியைச் சேர்ந்த முத்தையா (38) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 25 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.



Next Story