மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மங்காம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 35) என்பவர் தனது பெட்டிக்கடையிலும், ஊமை உடையனுரை சேர்ந்த முருகேசன் (50) அவரது வீட்டின் பின்புறமும் வைத்து மது விற்று கொண்டிருந்தனர்.

இதையடுத்து ரமேஷ், முருகேசன்ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story