சாராயம் விற்ற 2 பேர் கைது


சாராயம் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2022 6:45 PM GMT (Updated: 13 Dec 2022 6:46 PM GMT)

புதுச்சத்திரம், பண்ருட்டியில் சாராயம் விற்ற 2 பேர் கைது

கடலூர்

கடலூர்

புதுச்சத்திரம் அருகே கீழ்பூவாணிக்குப்பம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 46). இவர் அவரது வீட்டில் சாராயம் விற்பனை செய்து வருவதாக போதை பொருள் தடுப்பு புகார் எண்ணுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது ராதாகிருஷ்ணன் 5 லிட்டர் சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் பண்ருட்டி எல்.என்.புரம் பாரதிநகரில் 5 லிட்டர் சாராயம் வைத்து விற்பனை செய்த முருகன் மனைவி கிருஷ்ணவேணி (57) என்பவரை, பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். 2 பேரிடம் இருந்தும் 10 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story