கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது


கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது
x

கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

தென்னிலை அருகே உள்ள கூனம்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 35). இவர் நேற்று காலை கூனம்பட்டி பிரிவு சாலை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புதுக்கோட்டை மாவட்டம், மதுக்கூரைச் சேர்ந்த முத்துக்குமார் (20), முக்குடிச்சாலை மௌலானா தோப்பை சேர்ந்த முகமது சஹிம் (20) ஆகியோர் கத்தியை காட்டி சரவணகுமாரை மிரட்டி அவரிடம் பணம் பறிக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து சரவணக்குமார் கொடுத்த புகாரின்பேரில், தென்னிலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி வழக்குப்பதிந்து, முத்துக்குமார், முகமது சஹிம் ஆகிய 2 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது அடிதடி, திருட்டு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story