அரிவாளுடன் வந்த 2 பேர் கைது


அரிவாளுடன் வந்த 2 பேர் கைது
x

சிவகாசி அருேக அரிவாளுடன் வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சாமியார்மடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர்கள் அரிவாள், வேல்கம்பு ஆகியவற்றை வைத்திருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தியபோது திருத்தங்கலை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 38), முனீஸ்வரன் (25) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து அரிவாள், வேல்கம்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story