மதுவிற்ற 2 பெண்கள் கைது


மதுவிற்ற 2 பெண்கள் கைது
x

அரக்கோணம் அருகே மதுவிற்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணம் அருகே பருத்திபுத்தூர், கும்பினிபேட்டை ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்கப்படுவதாக அரக்கோணம் கலால் இன்ஸ்பெக்டர் லதாவிற்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரின் அவரது தலைமையிலான போலீசார் பருத்திபுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த அனிதா (வயது 31) என்பதும், மது விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று கும்பினிபேட்டை பகுதியில் அதே பகுதியை சேர்ந்த கவுரி (46) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்களை கலால் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story