மளிகைக்கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி...!


மளிகைக்கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி...!
x

மளிகைக்கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் கோண்டூரில் உள்ள மளிகைக்கடையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் கொத்தனார் மணிகண்டன் மற்றும் அய்யப்பன் என்பவர் ஈடுபட்டுள்ளனர். அப்போது கழிவுநீர் தொட்டில் இருந்த விஷயாவு தாக்கி 2 பேரும் உள்ளேயே மயங்கி விழுந்து உள்ளனர்.

இதனை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அவர்கள் கழிவுநீர் தொட்டில் விஷயாவு தாக்கி கிடந்த 2 பேரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இறுதியில் 2 தொழிலாளர்களும் உயிரிழந்த நிலையில் கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டனர். தற்போது 2 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story