அரசு பஸ் கண்ணாடி உடைத்த 2 வாலிபர்கள் கைது


அரசு பஸ் கண்ணாடி உடைத்த 2 வாலிபர்கள் கைது
x

கீழ்பென்னாத்தூரில் அரசு பஸ் கண்ணாடி உடைத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த மனோகர் மகன் மதன் (வயது 24). இவரும், 17 வயது வாலிபரும் குடிபோதையில் கீழ்பென்னாத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது அரசு மேல்நிலைப்பள்ளி அருகே திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். இதனை தட்டிக் கேட்ட பஸ் டிரைவர் கோபிநாதன், கண்டக்டர் கிருஷ்ணன் ஆகியோரை தகாத வார்த்தைகளால் பேசி, பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி வழக்குப்பதிவு செய்து, மதன் மற்றும் 17 வயது வாலிபரை கைது செய்தனர்.


Next Story